பிரதமருக்கு எதிரான பேரணியின் இறுதி நாள் இன்று

பிரதமருக்கு எதிரான பேரணி பாராளுமன்றத்தை அண்மிக்கவுள்ளது

by Staff Writer 04-04-2018 | 1:28 PM
COLOMBO (News 1st) - பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியின் இறுதி நாள் இன்றாகும். கிரிபத்கொடவில் இன்று பயணத்தை ஆரம்பித்த பேரணி, பாராளுமன்ற கட்டடத்தொகுதியை அண்மிக்கவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி என்பன இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளன. ''சர்வதிகார நண்பர்களை தோற்கடிப்போம்'' என்ற தொனிப்பொருளில் இந்த பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.