பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

by Bella Dalima 04-04-2018 | 10:06 PM
Colombo (News 1st)  பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது, பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. வாக்களிப்பில் 26 பேர் கலந்துகொள்ளவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.