பிரதமர் பதவியைப் பெறும் எண்ணம் மஹிந்தவிற்கு இல்லை

பிரதமர் பதவியைப் பெறும் எண்ணம் மஹிந்த ராஜபக்ஸவுக்கு இல்லை: ரோஹித்த அபேகுணவர்தன

by Bella Dalima 03-04-2018 | 7:51 PM
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருடன் கொழும்பு விஜயராம இல்லத்தில் இன்று மாலை கலந்துரையாடலில் ஈடுபட்டார் நாளை (03) நடைபெறவுள்ள விவாதத்தில் கருத்து தெரிவிப்பவர்கள் மற்றும் கால எல்லை தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. பிரதமருக்கு எதிரான நாளைய வாக்கெடுப்பின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பங்கேற்பார் என பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டார். இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றி கொண்டு பிரதமர் பதவியைப் பெறும் எண்ணம் மஹிந்த ராஜபக்ஸவுக்கு இல்லை என ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டார்.