பிரதமருக்கு எதிரான பேரணி கிரிபத்கொடயை அடைந்தது

பிரதமருக்கு எதிரான பேரணி கிரிபத்கொடயை அடைந்தது

by Bella Dalima 03-04-2018 | 9:02 PM
Colombo (News 1st)  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் ஆரம்பமான பேரணியின் நான்காம் நாளான இன்று, நிட்டம்புவ நகரில் பயணம் ஆரம்பமானது. ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி என்பன இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளன. சர்வாதிகார நண்பர்களைத் தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த பேரணி முன்னெடுக்கப்படுகின்றது. நிட்டம்புவ நகரில் ஆரம்பமான பேரணி, கிரிபத்கொடயில் இன்றைய பயணத்தை நிறைவு செய்தது.