அங்கொட லொக்காவின் பிரதான உதவியாளர் கைது

பாதாள உலகத்தலைவரான அங்கொட லொக்காவின் பிரதான உதவியாளர் கைது

by Staff Writer 03-04-2018 | 12:57 PM
COLOMBO (News 1st)  - பாதாள உலகத்தலைவரான அங்கொட லொக்காவின் முக்கிய உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ச்சீட்டி என்றழைக்கப்படும் சரத் குமார என்ற குறித்த சந்தேகநபர் இன்று காலை கொட்டிகாவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். 41 வயதான சந்தேகநபரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபரை இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=7pnnxanMg44