பதவி விலகுமாறு பிரதமருக்கு அறிவிப்பு

பதவி விலகுமாறு பிரதமருக்கு அறிவித்ததாக எஸ்.பி.திசாநாயக்க தெரிவிப்பு

by Staff Writer 03-04-2018 | 12:31 PM
COLOMBO (News 1st) - ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்றிரவு ஏகமனதாக எடுத்த தீர்மானத்திற்கு அமைய, பதவியிலிருந்து விலகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்ததாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்தனர். இந்த நிலைப்பாட்டினையும் பிரதமருக்கு அறிவித்ததாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டார்.