தொடரும் கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு

கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுத்தந்தால் பகிஷ்கரிப்பை கைவிடுவதாக கல்விசாரா ஊழியர்கள் தெரிவிப்பு

by Staff Writer 03-04-2018 | 9:11 AM
COLOMBO (News 1st) - எழுத்து மூலமான சுற்றுநிரூபத்தினூடாக தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் பட்சத்தில் தமது பணிப்பகிஷ்கரிப்பை கைவிடுவதாக பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் நேற்று பிற்பகல் ஒன்றுகூடி தீர்மானம் எட்டப்பட்டதாக சம்மேளனத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே குறிப்பிட்டார். தமது கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சர் கபீர் ஹசீம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதன்போது தமது கோரிக்கைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாக பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே குறிப்பிட்டார்.  

ஏனைய செய்திகள்