கட்டுநாயக்க விமானநிலைய ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 03-04-2018 | 12:08 PM
COLOMBO (News 1st) - கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை வழங்கப்படுகின்ற சம்பள உயர்வை வழங்குமாறு கோரி விமான நிலைய ஊழியர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கோரிக்கை தொடர்பில் விமான நிலைய ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே இன்று முற்பகல் பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது. இந்தப் பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவுபெற்றதால், ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். https://www.youtube.com/watch?v=_2Jb8P3Yc3k