by Bella Dalima 03-04-2018 | 6:40 PM
Colombo (News 1st)
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டதாக விமான நிலைய அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் செயலாளர் ஏ.டீ.எஸ். உதயங்க தெரிவித்தார்.
மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை வழங்கப்படுகின்ற சம்பள உயர்வை வழங்குமாறு கோரி விமான நிலைய ஊழியர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்தனர்.