by Staff Writer 03-04-2018 | 9:51 AM
COLOMBO (News 1st) - எகிப்து நாட்டின் ஜனாதிபதியாக அப்துல் பட்டா அல் சிசி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் நேற்று இடம்பெற்றன.
இதில் 97 வீத வாக்குகளை பெற்று அப்துல் சிசி மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்பிரகாரம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு வரை அப்துல் சிசி பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.