by Staff Writer 03-04-2018 | 11:31 AM
COLOMBO (News 1st) - சிலாபம் புத்தளம் பிரதான வீதியின் ஆராய்ச்சிக்கட்டு ஹெலம்பவடவன பகுதியில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன் பஸ் மோதியதில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றே இன்று காலை விபத்திற்குள்ளாகியுள்ளது.
நுரைச்சோலையிலிருந்து பிங்கிரிய வரை குறித்த பஸ் பயணித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த ஊழியர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
https://www.youtube.com/watch?v=MYx6tTANVuI