ஶ்ரீலங்கன்விமான நிறுவனத்திற்கு புதியதலைவர் நியமனம்

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு புதிய தலைவர், பணிப்பாளர் சபைக்கான 4 உறுப்பினர்கள் நியமனம்

by Staff Writer 02-04-2018 | 3:28 PM
COLOMBO (News st) - ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு புதிய தலைவரும் பணிப்பாளர் சபைக்கான 4 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் புதிய தலைவராக ரஞ்சித் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். மனோ தித்தவெல்ல, சுசந்த கட்டுகம்பொல, கலாநிதி ரொஷான் பெரேரா ஆகியோர் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எயார் மார்ஷல் கபில ஜெயம்பதியும் விமான நிறுவனத்தின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பணிப்பாளர் சபை சமர்ப்பித்த இராஜினாமா கடிதங்கள் கடந்த 29 ம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து புதிய தலைவரும் பணிப்பாளர் சபையும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.