by Staff Writer 01-04-2018 | 9:30 PM
வறுமைக்கு மத்தியிலும் விளையாட்டுத்துறையில் சாதித்த பலர் எம்மத்தியில் இருக்கின்றார்கள்.
அவ்வாறு குண்டெறிதல் போட்டியில் சர்வதேச அரங்கில் பிரகாசிக்கும் எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கும் ஒரு வீராங்கனை தொடர்பில் பார்க்கலாம்.
2017 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விழாவில் 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான குண்டெறிதல் போட்டியில் சாதித்த வீராங்கனை ஜேசுதாசன் ஜெசிந்தா.
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இவர் உயரம் பாய்தல் குண்டெறிதல் மற்றும் நீளம் பாய்தல் போட்டிகளில் திறமையான வீராங்கனையாக திகழ்கின்றார்.
குடும்பத்தின் வறுமையே இவரது இலட்சியத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
தந்தையின் வருமானம் குடும்பத்தின் அன்றாட செலவுகளுக்கே போதுமானதாய் அமைந்துள்ளது.
வறுமைக்கு மத்தியிலும் தனது திறமையை நிரூபிக்க ஜெசிந்தா ஒரு போதும் தவறியதில்லை.
சர்வதேச அரங்கில் பதக்கமொன்றை வெற்றிக் கொள்ளும் எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கும் இந்த வீராங்கனையை உருவாக்குவது எமது சமூகத்தின் பொறுப்பல்லவா ?
https://www.facebook.com/265986223570334/videos/938994339602849/