தடையை மீறி நடைபெறும் ஜுங்கா படப்பிடிப்பு

தடையை மீறி நடைபெறும் ஜுங்கா படப்பிடிப்பு

by Staff Writer 01-04-2018 | 6:46 PM
COLOMBO (News 1st) - அனுமதி பெறாமல் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால், விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ மீது நடவடிக்கை பாயலாம் எனத் தெரிகிறது. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘ஜுங்கா’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, ‘வனமகன்’ சயிஷா ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் சேதுபதியின் படங்களிலேயேஇதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பதால் அவரே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ‘ஜுங்கா’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பரீஸில் நடைபெறுகிறது. வெளிநாடுகளிலும் தற்போது படப்பிடிப்பு நடத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தடைவிதித்துள்ளது. ஆனால், தடையை மீறி பரீஸ், ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் ‘ஜுங்கா’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. எனவே, ஜுங்கா’ மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.