பரீட்சையில் மோசடிசெய்த மாணவர்கள் தொடர்பில் விசாரணை

சாதாரண தரப்பரீட்சையில் மோசடி செய்த மாணவர்கள் தொடர்பில் விசாரணை

by Staff Writer 01-04-2018 | 4:20 PM
COLOMBO (News 1st) - சாதாரண தரப்பரீட்சையில் மோசடி செய்த 969 மாணவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை மோசடியில் , 2194 மாணவர்கள் ஈடுபட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார். இவர்களில் 969 மாணவர்களின் பெறுபேறுகளை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். குறித்த மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்குள் மோசடியில் ஈடுபட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.