பிரதமருக்கு எதிரான பிரேரணையை ஆதரித்து பேரணி

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து கண்டியில் இருந்து கொழும்பு வரை பேரணி

by Bella Dalima 31-03-2018 | 3:11 PM
Colombo (News 1st)  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து, கண்டியில் இருந்து கொழும்பு வரை பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ''சர்வாதிகார நண்பர்களை தோற்கடிப்போம்'' என்ற தொனிப்பொருளில், ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி என்பன இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளன. கண்டி - கெடம்பே விஹாரையில் நடைபெற்ற சமய வழிபாடுகளின் பின்னர், கெடம்பே மைதானத்திற்கு அருகில் இந்த பேரணி ஆரம்பமானது.  

ஏனைய செய்திகள்