நுவரெலியாவில் குடிநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு

நுவரெலியாவில் மலக்கழிவு கலந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் குடிநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு

by Staff Writer 29-03-2018 | 11:05 AM
COLOMBO (News 1st) - நுவரெலியாவில் மலக்கழிவு கலந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் குடிநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நீர் மாதிரிகள் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீதுருதாலகால மலையடிவாரத்தில் காணப்படும் 8 ஊற்றுக்களிலிருந்து நுவரெலியா நகர எல்லைக்குள் நீர் விநியோகிக்கப்படுகின்றது. நீர் தாங்கிகளில் சேகரிக்கப்பட்டு குளோரின் சேர்த்து விநியோகிக்கப்படுகின்றது. எனினும், அண்மைக் காலமாக குடிநீரில் மலக்கழிவு கலந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.