நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க தீர்மானம்

நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

by Staff Writer 29-03-2018 | 2:40 PM
COLOMBO (News 1st) - பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து தோற்கடிக்கவுள்ளதாக இன்று கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறிகொதவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலும் , கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பிலும் இன்று கலந்துரையாடப்பட்டது.