சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின

சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின: தமிழ் மொழிமூலம் யாழ். வேம்படிகல்லூரி மாணவி முதலாம் இடம்

by Staff Writer 29-03-2018 | 7:00 AM
COLOMBO (News 1st) - யாழ். வேம்படிகல்லூரி மாணவி தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டுடிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (28)  நள்ளிரவு வௌியிடப்பட்டுள்ளன. www.doenets.lk என்ற இணையத்தள முகவரியூடாக பெறுபேறுகளை அறிந்துக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலையங்களுக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் இன்று (29) காலை 10 மணிக்கு பின்னர் பரீட்சைகள் திணைக்களத்தில் பெறுபேறுகளுக்கான ஆவணங்களை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து பாடசாலைகளுக்குமான பெறுபேறுகள் தபால் மூலம் இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளன. நேற்று நள்ளிரவு வௌியாகிய பெறுபேறுகளுக்கு அமைய 6 மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். கம்பஹா ரத்னாவலி மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கசுனி ஹங்சனா தத்சரனி செனவிரத்ன, அதே பாடசாலையைச் சேர்ந்த சமோதி ரவீசா சுபசிங்க மற்றும் கண்டி உயர் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த நவோதயா பிரபாவி ரணசிங்க ஆகியோர் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். மேலும் கண்டி மஹமாயா மகளிர் கல்லூரியின் லிமாஷா அமந்தி, மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் ரந்தி லக்பிரியா மற்றும் இரத்தினப்புரி சீவலி மத்திய மகா வித்தியாலயத்தின் கவீஷ பிரதீபாத் ஆகியோரும் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர். அகில இலங்கை ரீதியில் ஒரே அளவான பெறுபேறுகளை பெற்ற 9 மாணவர்கள் இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மிருதி சுரேஷ்குமார் , கண்டி ஹில்வூட் கல்லூரியைச் சேர்ந்த சிசங்ஷா கசுந்தி மற்றும் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் அமந்தி நயனதாரா ஜயசூரிய ஆகியோர் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர். இதேவேளை பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான மீள் பரிசீலனை விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படும் என உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பிட்டுள்ளார்.  

ஏனைய செய்திகள்