கொழும்பில் நாளை UNLEASHED இசை நிகழ்ச்சி

கொழும்பில் நாளை UNLEASHED இசை நிகழ்ச்சி: தென்னிந்திய இசைக் கலைஞர்கள் நாட்டை வந்தடைந்தனர்

by Bella Dalima 29-03-2018 | 9:02 PM
இந்திய திரைப்படத்துறையின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு, கொழும்பில் நாளை (30) இசை நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. CR & FC விளையாட்டரங்கில் நாளை மாலை இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. UNLEASHED இசை நிகழ்ச்சியில் தென்னிந்திய இசைக் கலைஞர்களான சித் ஸ்ரீராம், ஆண்ட்ரியா ஜெரமியா, சத்தியபிரகாஷ், நிகித்தா காந்தி, அபே ஜோட் புர்ஹர், அனில் ஸ்ரீநிவாசன் மற்றும் லியோன் ஜேம்ஸ் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர். UNLEASHED இசை நிகழ்ச்சிக்கு சக்தி FM, சக்தி TV ஊடக அனுசரணை வழங்குகின்றது.