ஜயசிரிபுர குடிநீர்த் திட்டம் மக்களிடம் கையளிப்பு

மக்கள் சக்தி: ஜயசிரிபுர குடிநீர்த் திட்டம் மக்களிடம் கையளிப்பு

by Staff Writer 28-03-2018 | 4:16 PM
COLOMBO (News 1st) - மக்கள் சக்தி 1000 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட பன்னல ஜயசிரிபுர குடிநீர்த் திட்டம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் ஊடாக 300 குடும்பங்கள் பயனடைகின்றனர். குருணாகல் மாவட்டத்தில் பன்னல பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஜயசிரிபுர கிராம மக்கள பல வருடங்களாக குடி நீர் இன்றி பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். இந்த கிராமத்தில் 300 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர் அவர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை பிரதேச சபையினால் பௌசர் மூலம் நீர் வழங்கப்பட்டு வந்து. அந்த நீர் தங்களின் தேவைக்கு போதியதாக இல்லை என மக்கள் குறிப்பிட்டனர். இந்த திட்டத்தின் தலைவரான சம்பத் திஸாநாயக்க தமையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதன் முதற்கட்டமாக கிணறு ஒன்று நிர்மானித்து அதில் இருந்து பெறப்படுகின்ற நீர், தாங்கியில் நிரப்பப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. இந்த திட்டத்திற்கு MAS நிறுவனம் அனுசரனை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=o4nymxmz-YI