எஹலியகொடவில் ஜீப்மோதியதில் 7வயதுசிறுவன் உயிரிழப்பு

எஹலியகொடவில் ஜீப் வண்டி மோதியதில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு

by Staff Writer 28-03-2018 | 4:57 PM
COLOMBO (News 1st) - எஹலியகொட யோகம பகுதியில் ஜீப் வண்டி மோதியதில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார் பாடசாலை விட்டு வீடு திரும்பிய போது முற்பகல் 11.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கிளாசல் தோட்டத்தைச் சேர்ந்த 7 வயதான சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளார். சிறுவனின் சடலம் அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து தெஹியோவிட்ட நோக்கி பயணித்த ஜீப் ஒன்றே சிறுவன் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. கைது செய்யப்பட்ட சாரதியிடம் ஆரம்பக் கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். எஹலியகொட பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.