பருத்தித்துறை நகரசபையை கைப்பற்றியது த.தே.கூ

பருத்தித்துறை நகரசபை தலைவர் பதவியை கைப்பற்றியது த.தே.கூ

by Staff Writer 27-03-2018 | 12:51 PM
COLOMBO (News 1st) - யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையின் தலைவர் பதவியை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இன்று முற்பகல் நடைபெற்ற வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யோசேப்பு இருதயராசா தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தவிசாளரை தெரிவு செய்வதற்கு நடைபெற்ற திறந்த வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு 7 வாக்குகளும் தமிழ் தேசியக் மக்கள் முன்னணிக்கு 6 வாக்குகள் கிடைத்துள்ளன. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 5 ஆசனங்களையும் கைப்பற்றியது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2 ஆசனங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை பதில் தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மதினி நெல்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.