கிழிந்த நாணயத்தாள்களை மாற்றிக்கொள்ளவும்

கிழிந்த நாணயத்தாள்களை 31ஆம் திகதிக்கு முன்னர் மாற்றிக்கொள்ளவும் - மத்திய வங்கி

by Staff Writer 27-03-2018 | 1:27 PM
COLOMBO (News 1st) - சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் இவ்வாறான நாணயத்தாள்களை மாற்றிக்கொள்ள முடியும். இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாணயத்தாள்களை சேதப்படுத்துதல் 1949 ஆம் ஆண்டு இலக்கம் 58 நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும் எனவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.