கோட்டை மாநகர சபையில் அமைதியின்மை

சபையை பிற்போடுவதற்கு எடுத்த தீர்மானத்தினால் கோட்டை மாநகர சபையில் அமைதியின்மை

by Staff Writer 26-03-2018 | 8:13 PM
COLOMBO (News 1st) - கோட்டை மாநகர சபையின் இன்றைய அமர்வை ஏப்ரல் 2 ஆம் திகதி ஒத்திவைப்பதற்கு மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் இன்று நடவடிக்கை எடுத்தார். இந்த நடவடிக்கைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்ததால் அமைதியின்மை ஏற்பட்டது. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் தலைவர் நியமனம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான அமர்வு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகவிருந்தது. எனினும் தமக்கு அழைப்பு கிடைக்கவில்லை என சில உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக கூறி, இன்றைய அமர்வை நடத்த முடியாது என ஆணையாளர் அறிவித்தார். இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டனர். பொலிஸ் பாதுகாப்புடன் உள்ளூராட்சி ஆணையாளர் அங்கிருந்து வெளியேறினார். https://www.youtube.com/watch?v=Xxu_3whQL2M