அத்துருகிரியவில்  துப்பாக்கிப் பிரயோகம்

அத்துருகிரியவில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

by Staff Writer 26-03-2018 | 3:39 PM
COLOMBO (News 1st) - அத்துருகிரிய , மாலபே ஜோதிபால மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.40 மணியளவில் இடம் பெற்றுள்ளதுடன் இதன் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. டீ 56 ரக துப்பாக்கியினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை மாலம்பே சைட்டம் சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நேற்றிரவு 7 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில், முல்லேரியாவை சேர்ந்த 46 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.