தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது

ஆறு இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது

by Staff Writer 25-03-2018 | 4:23 PM
COLOMBO (News 1st) - ஆறு இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னைக்கு செல்வதற்கு தயாராகவிருந்த ஒருவரே இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பதில் சுங்க ஊடகப் பேச்சாளர் விபுல மினுவன்பிடிய குறிப்பிட்டுள்ளார். 122 கிராம் நிறையுடைய 2 தங்கபிஸ்கட்டுகள் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பை சேர்ந்த 40 வயதான சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.