​ஆனந்தசுதாகரனை விடுவிக்க கோரி கையெழுத்து வேட்டை

ஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்து வேட்டை

by Staff Writer 25-03-2018 | 6:26 PM
COLOMBO (News 1st) - அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று முல்லைத்தீவில் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது. இந்த கையெழுத்து வேட்டையை தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மாற்றத்திற்கான அணி ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அருகிலிருந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்று கிளிநொச்சி வரை கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது. அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதற்கு உதவுமாறு அவரது இரண்டு பிள்ளைகளும் நேற்று கொழும்பில் வடமாகாண ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.