கதிர்காமத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

கதிர்காமம் பஸ் நிலையத்தில் பொலிஸ் புலனாய்வு அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

by Bella Dalima 24-03-2018 | 3:37 PM
Colombo (News 1st) கதிர்காமம் பஸ் நிலையத்தில் பொலிஸ் புலனாய்வு அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (23) மாலை சட்டத்தரணிகளுடன் சந்தேகநபர்கள், கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதை அடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சந்தேகநபர்கள் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.