வெற்றிமாறனை நம்பியதால் பயமில்லை: ஆண்ட்ரியா

வெற்றிமாறனை முழுமையாக நம்பியதால் பயமில்லை: ஆண்ட்ரியா

by Bella Dalima 23-03-2018 | 7:39 PM
வட சென்னை படத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா, வெற்றிமாறனை முழுமையாக நம்பியதால் தற்போது பயமில்லை என்று கூறியிருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ படத்தில் ஆண்ட்ரியா வட சென்னை பெண்ணாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது பற்றி கூறிய ஆண்ட்ரியா....
முகத்தோற்றம், கால்ஷீட் திகதி பார்த்து இயக்குனர்கள் நடிகைகளைத் தெரிவு செய்வார்கள். ஆனால், வெற்றிமாறன் மிகவும் வித்தியாசமானவர். நடிகர், நடிகைகளை அவர் தெரிவு செய்யும் விதமே தனி. தனது கதாபாத்திரங்களின் குணாதிசயம் யாரிடம் உள்ளது என்று பார்ப்பார். அதைக் கண்டுபிடித்துவிட்டால் அவர்களை தனது படத்தில் நடிக்க வைப்பார். தோற்றம் எல்லாம் அதற்கு பிறகுதான். வெற்றிமாறன் போல பெரும்பாலான இயக்குனர்கள் நடிகர், நடிகைகளைத் தெரிவு செய்வது இல்லை. பல நேரம் செட்டில் என்ன நடக்கிறது என்பதே எனக்கு புரியாது. ஆனால், என்ன செய்கிறார் என்பது அவருக்குத் தெரியும். ஒரு கலைஞராக அவரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டும். வட சென்னை’ படத்தில் எப்படி நடிக்கப்போகிறேனோ என்று முதலில் பயந்தேன். வெற்றிமாறனை முழுமையாக நம்பியதால் இப்போது அந்த பயம் இல்லை.
என தெரிவித்துள்ளார்.