வியட்நாமில் 20 மாடி குடியிருப்பில் தீ: 13 பேர் பலி

வியட்நாமில் 20 மாடி குடியிருப்பில் தீ பரவல்: 13 பேர் உயிரிழப்பு

by Bella Dalima 23-03-2018 | 7:20 PM
வியட்நாமின் ஹோசிமின் நகரில் உள்ள 20 மாடிகளைக் கொண்ட குடியிருப்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். வியட்நாம் நாட்டின் ஹோசிமின் நகரின் தென்மேற்கு பகுதியில் உள்ள 8 ஆவது மாவட்டத்தில் 20 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு வீட்டில் பிடித்த தீ மற்ற வீடுகளுக்கும் வேகமாகப் பரவியுள்ளது. இதனால், குடியிருப்பு வாசிகள் ஜன்னல் வழியாக கயிறுகளைக் கட்டி இறங்கியுள்ளனர். பலர் வெறுமனே கீழே குதித்துள்ளனர். இரண்டு மணி நேரம் போராடி மீட்புக்குழுவினர் தீயை அணைத்துள்ளனர். இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 28 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.