by Bella Dalima 23-03-2018 | 3:43 PM
Colombo (News 1st)
யாழ்ப்பாணம் - நாயன்மார்கட்டு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (22) இரவு வீதியோரத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 14 வயதான சிறுமியொருவரும் இரண்டு பெண்களும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த சந்தேகநபர் மனநலம் குன்றியவர் என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
வாள்வெட்டு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.