by Bella Dalima 23-03-2018 | 5:10 PM
பிரான்ஸின் தென்பகுதியில் உள்ள கார்க்கசொன்னே நகரில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் அங்கிருந்தவர்கள் சிலரை பிணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளார்.
சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
சுப்பர் மார்க்கெட்டினுள் பணயக்கைதிகளை துப்பாக்கிதாரி மிரட்டிய சந்தர்ப்பத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதன்போது, இருவர் காயமடைந்திருக்கக்கூடும் என AFP தெரிவித்துள்ளது.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தனக்கு தொடர்பிருப்பதாக துப்பாக்கிதாரி தெரிவித்ததாகவும் AFP செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக உத்தியோகப்பூர்வமற்ற தகவல் வௌியாகியுள்ளது.
குறித்த சுப்பர் மார்க்கெட்டை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.