தம்புள்ளையில் விசவாயுக் கசிவு: இருவர் பலி

தம்புள்ளை பலசரக்கு உற்பத்தி நிலையத்தில் விசவாயுக் கசிவு: இருவர் பலி

by Bella Dalima 23-03-2018 | 5:54 PM
Colombo (News 1st) தம்புள்ளை - பன்னம்பிட்டிய பகுதியில் உள்ள பலசரக்கு உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட விசவாயுக் கசிவினால் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (22) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். பலசரக்கு உற்பத்தி நிலையத்தில் பணியாற்றிய இருவரே உயிரிழந்துள்ளனர். தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 19 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் ​ தெரிவித்தனர் இந்த உற்பத்தி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.