அலோசியஸ்,கசுனின் பிணை மனு பரிசீலிக்கப்படவுள்ளது

அர்ஜுன் அலோசியஸ், கசுன் பாலிசேனவிற்கு பிணை கோரும் மீள்பரிசீலனை மனு பரிசீலிக்கப்படவுள்ளது 

by Bella Dalima 23-03-2018 | 4:47 PM
Colombo (News 1st) பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோருக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மீள்பரிசீலனை மனுவை எதிர்வரும் 29 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்ன இன்று இந்த தீர்மானத்தை அறிவித்தார். மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.