முத்துராஜவெலயில் இடம்பெறும் பாதகசெயல்களை நிறுத்துக

முத்துராஜவெல சரணாலயத்தில் இடம்பெறும் கட்டட நிர்மாணம், காணி நிரப்பலை நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

by Bella Dalima 22-03-2018 | 3:54 PM
  Colombo (News 1st)  முத்துராஜவெல சரணாலயத்தில் இடம்பெறும் சூழலுக்கு பாதகமான செயற்பாடுகள் அனைத்தையும் நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். குறிப்பாக சரணாலயத்தில் இடம்பெறுகின்ற கட்டட நிர்மாணப் பணிகள், காணி நிரப்பும் பணிகள் ஆகியவற்றை நிறுத்துமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார். முத்துராஜவெல சரணாலயத்திற்கான காண்காணிப்பு விஜயத்தைத் தொடர்ந்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.