by Staff Writer 22-03-2018 | 9:19 AM
COLOMBO (News 1st) - டெங்கு நோய் பரவும் அவதானம் உள்ள சில பகுதிகளில் இன்று மற்றும் நாளைய தினங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சூழலை சுத்தமாக வைத்து கொள்வதன் மூலம் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த முடியும் என பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.