விமல் வீரவன்ச,ஜயந்த சமரவீரவிற்கு மீண்டும் பிடியாணை

விமல் வீரவன்ச, ஜயந்த சமரவீரவைக் கைது செய்ய மீண்டும் பிடியாணை

by Bella Dalima 20-03-2018 | 5:20 PM
Colombo (News 1st) தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீண்டும் பிறப்பிப்பதற்கு கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்று உத்தரவிட்டார். விமல் வீரவன்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோர் நேற்று (19) நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இன்று ஆஜராகியதைத் தொடர்ந்து மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அதற்கமைய, இருவரையும் குறித்த திகதியில் தவறாமல் ஆஜராகுமாறு நீதவான் அறிவுறுத்தியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி ஐ.நா மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் நாட்டிற்கு மேற்கொண்ட விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவ்விருவருக்கும் எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.