by Staff Writer 20-03-2018 | 11:57 AM
ஜா எல - ஏக்கல பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட வாயுக்கசிவினால் இன்றைய தினமும் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோர் அனைவரும் வைத்தியசாலையின் வௌிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதாக கம்பஹா வைத்தியாலையின் பணிப்பாளர் டொக்டர் முதித கருணாதிலக தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட வாயுக்கசிவினால் தொழிற்சாலையில் பணிபுரிந்த 42 பேர் ராகம வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரில் அநேகமானோர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.