by Bella Dalima 20-03-2018 | 4:48 PM
Colombo (News 1st)
இம்முறை பெரும்போக அறுவடையில் கிடைத்த நெல் உற்பத்தியானது எதிர்வரும்7 மாத காலத்திற்கு போதுமானது என விவசாய இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்முறை பெரும்போகம் மூலம் 2.4 மில்லியன் மெட்ரிக் தொன் உற்பத்தி எதிர்பார்க்கப்பட்டதுடன், 6 இலட்சத்து 39 ஆயிரம் ஹெக்டயார் நிலப்பரப்பில் பெரும்போக பயிர்செய்கை மேற்கொள்ளபட்டது.
கடந்த காலத்தில் நிலவிய வரட்சியுடனான வானிலையால் 50 வீதமான பயிர்செய்கை பாதிப்புற்றதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.