சமரியின் தலைமையில் களமிறங்கும் இலங்கை மகளிர் அணி

தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்கும் நோக்கில் இலங்கை மகளிர் அணி

by Staff Writer 20-03-2018 | 9:05 AM
COLOMBO (News 1st) - இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கை மகளிர் அணியை சமரி அத்தபத்து வழிநடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை குழாத்திற்கு முன்னாள் அணித்தலைவி சசிகலா சிறிவர்தன மற்றும் இனோகா ரணவீரவும் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த தொடரில் 3 ஒருநாள் போட்டிகளும், மூன்று 20 க்கு 20 போட்டிகளும் உள்ளடங்குகின்றன. இன்று ஆரம்பமாகவுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டி ரங்கிரி தம்புளை மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஒருநாள் போட்டிகள் எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், மீதமுள்ள 20 க்கு 20 போட்டிகள் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானம் மற்றும் என்.சி.சி ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளன.