by Staff Writer 20-03-2018 | 6:32 AM
COLOMBO (News 1st) - அத்துருகிரிய - ஒருவல, கல்வருச வீதி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பாதாள குழுவைச் சேர்ந்த சமயங்குடன் தொடர்புள்ள ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
அங்கொட லொக்கா என்ற பாதாள குழு உறுப்பினர் ஒருவரினால் இந்த துப்பாக்கிப் பிரையோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிப் பிரயோகம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருக்கும் போது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 44 வயதுடைய கடுவல கொரதொட பகுதியைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தன்னது.