காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

by Staff Writer 19-03-2018 | 7:54 PM
COLOMBO (News 1st) - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரிக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். யாழ். புனித பத்திரிசியார்கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர் மற்றும் சமூக செயற்பட்டாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். 2009 ஆம் ஆண்டு வௌ்ளைக் கொடியுடன் சென்றபோது காணாமல் போனதாக கூறப்படும் அருட் தந்தை பிரான்ஸிஸ் ஜோசபை தேடித் தருமாறு கோரி, யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர்களும் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். புனித பத்திரிசியார் கல்லூரியை நோக்கி போராட்டக்காரர்கள் செல்ல முற்பட்ட போது பொலிஸாரினால் தடுக்கப்பட்டனர். இதேவேளை யாழ். மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அலுவலக நுழைவாயிலும் இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முற்றுகையிடப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அலுவலக வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். https://www.youtube.com/watch?v=bWxlMxbh1xU