ஆமர் வீதி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

ஆமர் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 19-03-2018 | 4:05 PM
COLOMBO (News 1st) - கொழும்பு ஆமர் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை 10.55 அளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆண் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், காரொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி, தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபர்கள் இதுவரை அடையாளங் காணப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.