உயிரழந்த கைதியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

வெலிக்கடை சிறையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

by Staff Writer 18-03-2018 | 7:11 PM
COLOMBO (News 1st) - கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலையில் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். வவுனியாவைச் சேர்ந்த 70 வயதான சண்முகநாதன் தேவகன் என்பவரே நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்துள்ளார். 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி சண்முகநாதன் தேவகன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். https://www.youtube.com/watch?v=8hDBQs8FOn4