மட்டக்களப்பில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

by Staff Writer 18-03-2018 | 5:43 PM
COLOMBO (News 1st) - மட்டக்களப்பு கிரான் புலிபாய்ந்தகல் கிராமத்திலுள்ள ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்து இன்று மாலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் வௌியிட்டுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.