by Staff Writer 18-03-2018 | 4:14 PM
COLOMBO (News 1st) - தேயிலையின் தரத்தை தொடர்ந்தும் முறையாக பேண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக நாடு முழுவதிலுமுள்ள தேயிலை தொழிற்சாலைகள் கண்காணிக்கப்படவுள்ளதாக தேயிலை ஆணையாளர் பி.ஏ.ஜே.கே.எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது இயங்கும் 709 தேயிலைத் தொழிற்சாலைகள் இரண்டு மாதங்களுக்குள் அவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் தேயிலை ஆணையாளர் பி.ஏ.ஜே.கே.எதிரிசிங்க மேலும் கூறியுள்ளார்.