தேயிலையின் தரத்தை முறையாக பேண நடவடிக்கை

தேயிலையின் தரத்தை தொடர்ந்தும் முறையாக பேண நடவடிக்கை

by Staff Writer 18-03-2018 | 4:14 PM
COLOMBO (News 1st) - தேயிலையின் தரத்தை தொடர்ந்தும் முறையாக பேண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதிலுமுள்ள தேயிலை தொழிற்சாலைகள் கண்காணிக்கப்படவுள்ளதாக தேயிலை ஆணையாளர் பி.ஏ.ஜே.கே.எதிரிசிங்க தெரிவித்துள்ளார். தற்போது இயங்கும் 709 தேயிலைத் தொழிற்சாலைகள் இரண்டு மாதங்களுக்குள் அவற்றின் செயற்பாடுகள் ​தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் தேயிலை ஆணையாளர் பி.ஏ.ஜே.கே.எதிரிசிங்க மேலும் கூறியுள்ளார்.