சுதந்திரக்கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா

சுதந்திரக்கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா

by Staff Writer 18-03-2018 | 10:56 PM
COLOMBO (News 1st) - சுதந்திரக்கிண்ண முக்கோண கிண்ண 20 க்கு 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சம்பியனானது. பங்களாதேஷ் அணியுடனான இறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது. இறுதி ஓவரில் வெற்றிக்காக 12 ஓட்டங்கள் தேவைபட்ட நிலையில் அதிரடியாக விளையாடிய தினேஸ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ஓட்டங்களை விலாசி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.