பொலன்னறுவை விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு

பொலன்னறுவை விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு ஆரம்பம்

by Bella Dalima 17-03-2018 | 8:14 PM
Colombo (News 1st)  பொலன்னறுவை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விவசாயி ஒருவரிடமிருந்து 2000 கிலோ நெல் கொள்வனவு செய்யப்படுவதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. இம்முறை 15,000 தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 600 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் 18 கொள்வனவு மத்திய நிலையங்கள் ஊடாக நெல் கொள்வனவு செய்யப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.