by Bella Dalima 16-03-2018 | 5:20 PM
Colombo (News 1st)
மன்னார் - மடு பகுதியில் கிணற்றில் வீழ்ந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
விவசாயக் கிணற்றில் வீழ்ந்தே குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (15) மாலை இடம்பெற்ற சம்பவத்தில் 5 மற்றும் 7 வயதான இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேதப் பரிசோதனை இடம்பெறவுள்ளது.
மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.